search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டிவனம் பஸ் விபத்து"

    திண்டிவனம் அருகே பஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து ஒலக்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த ஓங்கூர் பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம். இவரது மனைவி ஸ்ரீரங்கம் (வயது 65). இவர் இன்று காலை ஓங்கூர் குளக்கரை அருகே உள்ள மெயின்ரோட்டில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற பஸ் எதிர்பாராத விதமாக ஸ்ரீரங்கத்தின் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஸ்ரீரங்கம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த ஒலக்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×